ETV Bharat / international

ஐநா பொதுச்சபையில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா!

author img

By

Published : Sep 25, 2021, 12:45 PM IST

Updated : Sep 25, 2021, 2:39 PM IST

ஜம்மு- காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என ஐநா பொதுச் சபையில் இந்தியா தெரிவித்துள்ளது.

India slams Pakistan at UNGA, says J&K, Ladakh inalienable parts of country
ஐநா பொதுச்சபையில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா

நியூயார்க்(அமெரிக்கா): ஐநா மன்றத்தில் பொதுச்சபைக் கூட்டம் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் நடைபெற்றுவருகிறது. இக்கூட்டத்தில், பாகிஸ்தானை இந்தியா விளாசியுள்ளது.

முன்னதாக, இக்கூட்டத்தில் ஜம்மு- காஷ்மீர் பிரச்னை குறித்தும், பிரிவினைவாத தலைவர் கிலானி குறித்தும் பாகிஸ்தான் பேசியது. இதற்கு பதலிளிக்கும் வகையில் பேசிய ஐநா மன்றத்தின் இந்திய முதல் செயலாளர் சினேகா துபே, "ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசம் இரண்டும் இந்தியாவின் தவிர்க்க முடியாத பகுதிகளாக இருந்தது, இனியும் இருக்கும்" என்றார்.

ஐநா பொதுச்சபையில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுவருவதாக குறிப்பிட்ட அவர், இந்தியாவிற்கு எதிராக தீங்கிழைக்கும் பரப்புரைகளை பாகிஸ்தான் மேற்கொள்வது இது முதல் முறையல்ல என்றும், பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ள நிலையில் அதை திசைதிருப்ப இதுபோன்ற பரப்புரைகளை பாகிஸ்தான் மேற்கொண்டுவருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

"ஐநா மன்றத்தில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் பாகிஸ்தான் குறித்து நன்கு அறியும். பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து பயிற்சியளிக்கும் கொள்கையை வைத்திருப்பது உலகறியும். ஐநா பாதுகாப்பு கவுன்சிலால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்து அடைக்கலம் கொடுத்த வரலாறு பாகிஸ்தானுக்கு உண்டு" எனவும் சினேகா துபே பேசியுள்ளார்.

இரட்டை கோபுரம் தாக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அண்மையில் நினைவு கூர்ந்ததை குறிப்பிட்டு, அத்தாக்குதலுக்கு பின்புலமாக இருந்த ஓசமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தது பாகிஸ்தான்தான் எனவும், இன்றளவும் பாகிஸ்தான் தலைவர்கள் ஓசாமா பின்லேடனை தலைவராக உருவகப்படுத்தி வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வெள்ளை மாளிகையில் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு

நியூயார்க்(அமெரிக்கா): ஐநா மன்றத்தில் பொதுச்சபைக் கூட்டம் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் நடைபெற்றுவருகிறது. இக்கூட்டத்தில், பாகிஸ்தானை இந்தியா விளாசியுள்ளது.

முன்னதாக, இக்கூட்டத்தில் ஜம்மு- காஷ்மீர் பிரச்னை குறித்தும், பிரிவினைவாத தலைவர் கிலானி குறித்தும் பாகிஸ்தான் பேசியது. இதற்கு பதலிளிக்கும் வகையில் பேசிய ஐநா மன்றத்தின் இந்திய முதல் செயலாளர் சினேகா துபே, "ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசம் இரண்டும் இந்தியாவின் தவிர்க்க முடியாத பகுதிகளாக இருந்தது, இனியும் இருக்கும்" என்றார்.

ஐநா பொதுச்சபையில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுவருவதாக குறிப்பிட்ட அவர், இந்தியாவிற்கு எதிராக தீங்கிழைக்கும் பரப்புரைகளை பாகிஸ்தான் மேற்கொள்வது இது முதல் முறையல்ல என்றும், பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ள நிலையில் அதை திசைதிருப்ப இதுபோன்ற பரப்புரைகளை பாகிஸ்தான் மேற்கொண்டுவருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

"ஐநா மன்றத்தில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் பாகிஸ்தான் குறித்து நன்கு அறியும். பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து பயிற்சியளிக்கும் கொள்கையை வைத்திருப்பது உலகறியும். ஐநா பாதுகாப்பு கவுன்சிலால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்து அடைக்கலம் கொடுத்த வரலாறு பாகிஸ்தானுக்கு உண்டு" எனவும் சினேகா துபே பேசியுள்ளார்.

இரட்டை கோபுரம் தாக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அண்மையில் நினைவு கூர்ந்ததை குறிப்பிட்டு, அத்தாக்குதலுக்கு பின்புலமாக இருந்த ஓசமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தது பாகிஸ்தான்தான் எனவும், இன்றளவும் பாகிஸ்தான் தலைவர்கள் ஓசாமா பின்லேடனை தலைவராக உருவகப்படுத்தி வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வெள்ளை மாளிகையில் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு

Last Updated : Sep 25, 2021, 2:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.